திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2141 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2141முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஒருவன் பல போக்தாவாய் இருக்க ஒருவன் சாதனமாக வேண்டுகிற ஹேது என் என்னில் – அறியுமவன் செய்யும் அத்தனை போக்கி அறியாதவனால் செய்யலாவது உண்டோ என்கிறார் – சேதனர் கீழே போய்த்தும் தாங்கள் படுகிறதும் மேல் வரக் கடவதும் அறியார்கள் சர்வேஸ்வரன் பழகியான் தானே பணிமின் -நான் முகன் திரு -22-என்று இவர்கள் கீழ்ப் பட்டதும் இப்போது படுகிறதும் மேல் படக் கடவதும் எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஜ்ஞான சக்திகளை உடையவன் ஆகையாலே அவனே உபாயமாம் இத்தனை இறே – 60
சரணா மறைபயந்த தாமரையா னோடு, மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், – அரணாய பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது, ஓராழி சூழ்ந்த வுலகு.
பதவுரை Show / Hide
சரண் ஆம் மறை, Saran Aam Marai - (எல்லார்க்கும்) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை
பயந்த, Payandha - (எம்பெருமானிடத்தில் தானடைந்து நாட்டிலுள்ளவர்கட்காக) வெளிப்படுத்தின
தாமரையானோடு, Thamaraiyanodu - பிரமனோடுகூட
மரண் ஆய, Maran Aaya - மரணமடையுந் தன்மையுடைய
மன் உயிர்கட்கு எல்லாம், Man Uyirkadku Ellam - நித்யமான ஸ்வரூபத்தையுடைய ஆத்மாக்களெல்லாவற்றுக்கும்
அரண் ஆய, Aran Aaya - ரக்ஷகமான விதங்களை
பேர் ஆழி கொண்டபிராண் அன்றி, Per Aazhi Kondapiran Andri - பெரிய திருவாழியாழ்வானைக் கையிற்கொண்ட எம்பெருமான் அறிவனேயல்லது
மற்று, Mattru - அவனிலும் வேறான
ஓர் ஆழி சூழ்ந்த உலகு, Oru Aazhi Soozhntha Ulaku - கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்.
அறியாது, Ariyadhu - அறிமாட்டார்கள்.