திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2143 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவற்றை உண்டாக்கி மேல் உள்ள கார்யங்கள் தாங்களே செய்து கொள்ளுகிறார்கள் என்று இருக்கை அன்றிக்கே இவற்றுக்கு விரோதி யுண்டாமன்று களை பிடுங்குவானும் அவனே என்கிறார் – 62 | புணர்மருதி னூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து,
மணமருவ மால் விடையேழ் செற்று, – கணம்வெருவ
ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்,
சூழரவப் பொங்கணையான் தோள். | பதவுரை Show / Hideபுணர் மருதின் ஊடு போய், Punar Maruthin Oodu Poi - ஒன்றோடொன்று இணைந்திருந்த (இரட்டை) மருதமரத்தின் நடுவே தவழ்ந்து சென்று பூங்குருந்தம் சாய்த்து, Poongurundham Saayththu - [பின் பொருகாலத்தில்] (இலையும் கொம்புந் தெரியாதபடி) பூக்கள் நிரம்பியிருந்த குருந்த மரத்தை தள்ளிப் போட்டு மணம் மருவ, Manam Maruva - (மற்றுமொரு காலத்தில்) (நப்பின்னைப் பிராட்டியோடு) விவாஹம் நிறைவேறுதற்காக மால் விடை ஏழ் செற்று, Maal Vidai Ezh Settru - பெரிய வடிவையுடைய ஏழு ரிஷபங்களையும் முடித்து கணம் வெருவ, Kanam Veruva - (இன்னமொரு காலத்தில்) எல்லாப் பிராணிகளும் நடுங்கும்படி ஏழ் உலகும் தாயினவும், Ezh Ulakum Thaayinavum - மேலேழுலகங்களில் தாவிச் சென்றவையும் எண் திசையும் போயினவும், En Thisaiyum Poiyinavum - எட்டுத்திக்குக்களிலும் போய்ப்பரவியவையும். சூழ் அரவம் பொங்கு அனையான் தோள், Sozh Aravam Pongu Anaiyaan Thol - [எவையென்றால்] (பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ்வானை சிறந்த படுக்கையாகவுடையனான ஸர்வேச்வரனது திருத்தோள்களேயாம். |