திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2144 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2144முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி இருக்கிற சௌகுமார்யம் பாராதே ஆஸ்ரித விஷயத்திலே தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யும்படியான அவன் பக்கலிலே என்னுடைய சகல இந்த்ரியங்களும் பிரவணம் ஆய்த்தின நானும் பிரவணன் ஆனேன் என்கிறார்- 63
தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும், கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், – நாநாளும் கோணா கணையான் கூரைகழலே கூறுவதே, நாணாமை நள்ளேன் நயம்.
பதவுரை Show / Hide
தோள், Thol - (எனது) கைகளானவை
அவனை அல்லால் தொழா, Avanai Allal Thozha - (வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்) அப்பெருமானையல்லது வேறு எவரையும் வணங்கமாட்டா;
என்செவி இரண்டும், Enchevi Irandum - எனது காதுகளிரண்டும்
கேள் அவனது, Kel Avanathu - ஸகலவித பந்துவுமாகிய அப்பெருமான் விஷயமான
இன்மொழியே, Inmozhiye - இனிய பேச்சுக்களையே
கேட்டு இருக்கும், Kettu Irukkum - கேட்டுக்கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;
என் நா, En Naa - என்னுடைய நாவானது
நாளும், Naalum - நாள்தோறும்
கோள் நாக அணையான், Kol Naaga Anaiyaan - மிடுக்கையுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய அப்பெருமானது
குரை கழலே, Kurai Kazhale - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகளையே
கூறுவது, Koovudhuva - சொல்லா நிற்கிறது
நயம், Nayam - (இப்படியான பின்பு) சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன், Naanamaai Nalleen - வெட்கப்படாமல் விரும்பு வாரைப்போலே நான் விரும்பமாட்டேன்.