திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2146 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இது எனக்கு ஒருவனுக்குமே யன்று – அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் கிடீர் என்கிறார் – 65 | வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், – நினைதற்
கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக் கால். | பதவுரை Show / Hideநினைதற்கு அரியானை, Ninaitharku Ariyanai - (ஸ்வப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும் சேயானை, Seyaanai - (நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும் ஆயிரம் பேர், Aayiram Per - ஆயிரம் திருநாமங்களையுடையவனும் செம் கண் கரியானை, Sem Kan Kariyanai - சிவந்த திருக்கண்களையும் கறுத்த வடிவையுமுடையனுமான பெருமானைக் குறித்து கை தொழுதக்கால், Kai Thozhudakkal - அஞ்சலி பண்ணினால் வினையால், Vinaiyal - (அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்) நல்வினை தீவினைகளால் அடர்ப்படார், Adarppadar - நெருக்குபடமாட்டார்கள்; வெம் நரகில், Vem Narakil - கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில் சேரார், Searar - (மீண்டும்) சென்று கிட்டமாட்டார்கள்; தினையேனும், Dinaeyenum - சிறிதளவும் தீ கதிக்கண், Thee Kathikkan - கெட்டவழிகளில் செல்லார், Sellar - போகமாட்டார்கள். |