திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2147 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2147முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறிவுடையராய் இருப்பார்கள் ஆகில் பஜநீயன் அவனே கிடீர் என்கிறார் – 66
காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த மேலைத் தலைமறையோர் வேட்பனவும், – வேலைக்கண் ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும், பேராழி கொண்டான் பெயர்.
பதவுரை Show / Hide
உலகம், Ulagam - உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்
காலை எழுந்து, Kaalaik Ezhunthu - (ஸத்வகுணம் வளரக் கூடிய ) விடியற்காலையில் துயில் விட்டெழிந்து
கற்பனவும், Karppanavum - அப்யஸிப்பனவும்,
கற்று உணர்ந்த மேலை தலைமறையோர், Kattru Unarntha Melai Thalaimaraivor - படித்து அறிவு நிரம்பிய வைதி கோத்தமர்கள்
வேட்பனவும், Vedpanavum - ஸாக்ஷாத்கரிக்க ஆசைப்படுவனவும்.
வேலைக்கண் ஓர் ஆழியான், Velaikkan Oru Azhiyan - (எவையென்றால்) திருப்பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியையுடையனாய்ப் பள்ளி கொண்டிருக்கும் பெருமானுடைய
அடியே, Adiye - திருவடிகளேயாம்;
ஓதுவதும், Othuvathum - மஹான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும்
ஓர்ப்பனவும், Orppanavum - மநநம் பண்ணப் பெறுவனவும்
பேர் ஆழி கொண்டான், Per Aazhi Kondaaan - பெரிய கடல்போன்ற திருமேனியைக் கொண்ட அப்பெருமானுடைய
பெயர், Peyar - திருநாமங்களேயாம்.