திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2148 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2148முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) மோஷ இச்சை யுடையவர்களும் அறிவு தலை நின்றவர்களும் அவனுடைய திருவடிகளையே ஏத்துவது திரு நாமங்களை ஓதுவது என்று சொல்லிற்று -கீழே – இந்த நிர்பந்தம் வேண்டுவான் என் என்னில் நாம் தான் அறிவுடையாரை இ றே சொல்லிற்று அந்த அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீயபதி யல்லது இல்லாமையாலே என்கிறார் – 67
பெயரும் கருங் கடலே நோக்குமாறு, ஒண்பூ உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும் தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன், ஒருவனையே நோக்கும் உணர்வு.
பதவுரை Show / Hide
ஆறு, Aaru - ஆறுகளானவை
பெயரும் கரு கடலே நோக்கும், Peyarum Karu Kadalai Nokkum - பொங்கி கிளர்கின்ற மஹாஸமுத்ரத்தையே நோக்கிச் செல்லும்;
ஒண் பூ, On Poo - அழகிய தாமரைப் பூவானது
உயரும், Uyirum - உந்ததஸ்தநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற
கதிரவனே, Kadhiravane - ஸூர்யனையே
நோக்கும், Nokkum - கண்டுமலரும்;
உயிரும், Uyirum - பிராணனும்
தருமனையே நோக்கும், Tharumanaiye Nokkum - யமதர்மராஜனையே சென்று சேரும்;
உணர்வு, Unarvu - [இவை போலவே] ஞானமானது
ஒண் தாமரையாள், On Thamaraiyaal - அழகிய தாமரைப் பூவிற்
கேள்வன், Kelvan - பிறந்த பிராட்டிக்கு
ஒருவனையே, Oruvanaiye - வல்லபனான பெருமானொருவனையே
நோக்கும், Nokkum - சென்று பற்றும்