திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 215 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
215பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 3
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம் படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்–2-10-3
பதவுரை Show / Hide
தடம் படு,Thadam Padu - இடமுடைத்தான [விசாலமான]
தாமரைப் பொய்கை,Thamaraip Poigai - தாமரைப் பொய்கையை
கலக்கி,Kalakki - உள்ளே குதித்து கலங்கச் செய்வது (அக் கலக்கத்தினால் சீற்றமுற்று)
விடம் படு,Vidam Padu - விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின
நாகத்தை,Naagaththai - காளிய ஸர்ப்பத்தை
வால் பற்றி ஈர்த்து,Vaal Patri Eerththu - வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு)
படம்படு,Padam Padu - படமெடுக்கப்பெற்று
பை,Pai - மெத்தென்றிருந்த
தலை மேல்,Thalai Mel - (அந் நாகத்தின்) தலை மேல்
எழப் பாய்ந்திட்டு,Ezha Paindhittu - கிளாக்குதித்து (அத் தலையின் மீது நின்று)
உடம்பை,Udambai - (தன்) திரு மேனியை
அசைத்ததனால்,Asaiththadhaal - அசைத்து கூத்தாடின கண்ணபிரானால்
இன்று முற்றும்;,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
உச்சியில்,Uchiyil - (அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்) (அவனுடைய) படத்தின் மீது
நின்றானாள்,Nindranal - நின்றருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;