திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2150 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2150முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) உணர்வார் ஆர் என்று பிறர் விஷயமாகச் சொல்லிற்று அது கிடக்க உன்னாலே தான் உன்னை அறியப் போமோ என்கிறார் – 69
பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின் மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், – ஆலன்று வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ? சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு.
பதவுரை Show / Hide
சோலை சூழ் குன்று எடுத்தாய், Solai Soozh Kuntru Eduththai - சோலைகளால் சூழப்பட்ட கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தவனே!
நீ பாலன் தனது உருஆய், Nee Palaan Thanathu Uruvaai - நீ சிறுகுழந்தை வடிவு கொண்டு
ஏழ் உலகு, Ezhu Ulagu - எல்லா வுலகங்களையும்
உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்து
ஆல் இலையின் மேல், Aal Ilaiyin Mel - ஓர் ஆலந்தலிரின் மேல்
அன்று, Andru - பிரளயகாலத்தில்
வளர்ந்த, Valarntha - கண்வளர்ந்த செயலை
மெய் என்பர், Mei Enbar - (வைதிகர்கள் யாவரும்) ஸத்யமென்கிறார்கள்.
அன்று, Andru - (எல்லாம் அழிந்து கிடந்த) அக்காலத்தில்
ஆல், Aal - அந்த ஆலானது
வேலை நீர் உள்ளதோ, Velaai Neer Ullathoo - வெள்ளங் கோத்துக்கிடக்கிற பிரளய ஸமுத்திரத்தின் ஜலத்திலுள்ளதோ?
விண்ணதோ, Vinnathoo - (அல்லது) (நிராலம்பமான) ஆகாசதில்லுள்ளதோ?
மண்ணதோ, Mannathoo - (பிரளய ஜலத்திலேகரைந்துபோன) பூமியிலுள்ளதோ?
சொல்லு, Sollu - இவ்வாச்சரியத்தை நீயே சொல்லவேணும்.