திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2152 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2152முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நாட்டார் செய்த படி செய்கிறார்கள் நெஞ்சே நீ இவ் விஷயத்தை விடாதே கிடாய் என்கிறார் வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும் புயல் மேகம் போல் திரு மேனி யம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ் சயமே யடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே ? –திருவாய் மொழி -8-10-2-இத்யாதிப் படியே ஐஸ்வர்ய கைவல்யங்களில்  புகாதே அவன் தன்னையே பற்று என்கிறார் – 71
நன்றுபி ணிமூப்புக் கையகற்றி நான்கூழி, நின்று நிலமுழுதும் ஆண்டாலும்,– என்றும் விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய், அடலாழி கொண்டான்மாட் டன்பு.
பதவுரை Show / Hide
ஆழி நெஞ்சமே, Aazhi Nenjamai - (எம்பெருமானிடத்தில்) ஆழ்ந்திருக்கிற நெஞ்சே!
பிணி, Pini - வியாதியையும்
மூப்பு, Mooppu - கிழத்தனத்தையும்
நன்று கை அகற்றி, Nandru Kai Akattri - நன்றாக [ அடியோடு தொலைந்தொழியும்படி] விட்டும் [கைவல்ய மோஷத்தைப்பெற்றாலும்]
நான்கு ஊழி, Nangku Oozhi - நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையுலும்]
மின்று, Minru - ஸ்திரமாக இருந்து
நிலம் முழுதும் ஆண்டாலும், Nilam Muzhudhum Aandalum - பூமி தொடங்கிப்பிரமலோகம் வரையுள்ள இந்த அண்டைச்வரியங்கள் முழுவதையும் ஸ்வாதீனமாய் நிவகிக்கப் பெற்றாலும்
அடல் ஆழிகொண்டான் மாட்டு அன்பு, Adal Aazhikondan Maatu Anbu - தீக்ஷ்ணமான திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் ப்ரீதீயை
விடல், Vidal - விடாமலிரு;
வேண்டினேன், Vendinain - உன்னைப் பிரார்த்திக்கின்றேன் காண்.