திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2154 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவை மத்யஸ்தமாம் படி தாம் அவ் விஷயத்திலே ப்ரவணரான படி சொல்லுகிறது – 73 | புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, – திகழ்நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,
உடலும் உயிருமேற்றான். | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenje - (நல்லது கெட்டதுகளை ஆராயக்கூடிய ) மனமே! நீ, Nee - நீ பூந்துழாயானை, Poondhuzhayaanai - அழகிய திருத்துழாய் மாலையணிந்தபெருமானை புகழ்வாய், Pugazhvaai - ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு; பழிப்பாய், Pazhippaai - (அன்றியே) நிந்திப்பதானாலும் நிந்தி; இகழ்வாய், Ikazhvaai - (அன்றியே) அநாதரித்தாலும் அநாதரி; கருதுவாய், Karuduvaai - (அன்றியே) ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;) திகழ் நீர் கடலும், Thigal Nee Kadhalum - விளங்குகின்ற ஜலபூர்த்தியையுடைய ஸமுத்ரமும், மலையும், Malaiyum - பர்வதங்களும் இரு விசும்பும், Iru Visumbum - பரம்பிய ஆகாசமும் காற்றும், Kaatrum - வாயுவும் உடலும், Udalum - (தேவாதி) சரீரங்களும் உயிரும், Uyirum - (அந்தந்த சரீரங்களிலுள்ள) (பிராணிகளும் ஆகிய இவற்றையெல்லாம் ) ஏற்றான், Aetraan - தரித்துக் கொண்டிருப்பவன் அவ்வெம்பெருமானே காண். |