திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2154 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2154முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவை மத்யஸ்தமாம் படி தாம் அவ் விஷயத்திலே ப்ரவணரான படி சொல்லுகிறது – 73
புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை, இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, – திகழ்நீர்க் கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும், உடலும் உயிருமேற்றான்.
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - (நல்லது கெட்டதுகளை ஆராயக்கூடிய ) மனமே!
நீ, Nee - நீ
பூந்துழாயானை, Poondhuzhayaanai - அழகிய திருத்துழாய் மாலையணிந்தபெருமானை
புகழ்வாய், Pugazhvaai - ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு;
பழிப்பாய், Pazhippaai - (அன்றியே) நிந்திப்பதானாலும் நிந்தி;
இகழ்வாய், Ikazhvaai - (அன்றியே) அநாதரித்தாலும் அநாதரி;
கருதுவாய், Karuduvaai - (அன்றியே) ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;)
திகழ் நீர் கடலும், Thigal Nee Kadhalum - விளங்குகின்ற ஜலபூர்த்தியையுடைய ஸமுத்ரமும்,
மலையும், Malaiyum - பர்வதங்களும்
இரு விசும்பும், Iru Visumbum - பரம்பிய ஆகாசமும்
காற்றும், Kaatrum - வாயுவும்
உடலும், Udalum - (தேவாதி) சரீரங்களும்
உயிரும், Uyirum - (அந்தந்த சரீரங்களிலுள்ள) (பிராணிகளும் ஆகிய இவற்றையெல்லாம் )
ஏற்றான், Aetraan - தரித்துக் கொண்டிருப்பவன் அவ்வெம்பெருமானே காண்.