திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2157 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2157முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) உன்னைத் தொழுவார் பிழைப்பார் என்று சொல்ல வேணுமோ உன்னோடு சம்பந்தித்த திருமலை யாழ்வார் தம்மை ஆஸ்ரயித்தார்க்குத் தப்பாமல் ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் – பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை என்று இப்பாட்டை ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்- 76
வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா மொழிநின்ற மூர்த்தியரே யாவர், – பழுதொன்றும் வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த சீரான் திருவேங் கடம்.
பதவுரை Show / Hide
வழி நின்று, Vazhi Nindru - பக்திமார்க்கத்திலே நிலைத்து நின்று
நின்னை தொழுவார், Ninnai Thozhuvaar - உன்னை ஆச்ரயிக்கு மவர்கள்
வழுவாமொழி நின்ற மூர்த்தியரே ஆவர், Vazhuvamozhi Nindra Moorththiyare Aavar - உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப, ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்; (இதைப்பற்றிச் சொல்லவேணுமோ?)
மண் அளந்த சீரான் திருவேங்கடம், Man Alandha Seeraan Thiruveengadam - உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்கிற திருமலையே
பழுது ஒன்றும் வாராத வண்ணமே, Pazhuthu Ondrum Vaaradha Vanname - ஒரு குறையு மில்லாதபடி
விண் கொடுக்கும், Vin Kodukkum - (ஆச்ரிதர்களுக்கு) மோக்ஷமளிக்கக் காண்கிறோமன்றோ.