திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2159 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்தித்தால் நமக்கு அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற அடிமையில் புக்கு அல்லது நிற்க ஒண்ணாது கிடீர் என்கிறார் – 78 | இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்
தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, – படமுடை
பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,
கொய்ந்நாகப் பூம்போது கொண்டு. | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenje - மனமே! வேழம் தொடர், Vezham Thodar - கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்துவந்த வான், Vaan - பெரிய கொடு, Kodu - (நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட முதலை, Muthalai - முதலையை சூழ்ந்த, Soolntha - (தப்பிப்போகாதபடி) எண்ணிகொன்றவனும் படம் உடைய பைநாகம் பள்ளியான், Padam Udaiya Painagam Palliyaan - படத்தையும் பசுமைநிறத்தையுமுடைய திருவனந்தாழ்வானைத்திருப்பள்ளி மெத்தையாகவுடையனுமான எம்பெருமானது பாதம், Paatham - திருவடிகளை கொய் நாகம் பூ போது கொண்டு, Koyi Naagam Poo Podhu Kondo - கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக்கொண்டு கைதொழுதும், Kaithozhudum - தொழுவோம்; எழு, Ezu - எழுந்திரு; இடர், Idar - (அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்) துக்கத்தை படுவார் ஆர், Paduvaar Aar - அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.) |