திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2159 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2159முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்தித்தால் நமக்கு அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற அடிமையில் புக்கு அல்லது நிற்க ஒண்ணாது கிடீர் என்கிறார் – 78
இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம் தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, – படமுடை பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும், கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
வேழம் தொடர், Vezham Thodar - கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்துவந்த
வான், Vaan - பெரிய
கொடு, Kodu - (நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட
முதலை, Muthalai - முதலையை
சூழ்ந்த, Soolntha - (தப்பிப்போகாதபடி) எண்ணிகொன்றவனும்
படம் உடைய பைநாகம் பள்ளியான், Padam Udaiya Painagam Palliyaan - படத்தையும் பசுமைநிறத்தையுமுடைய திருவனந்தாழ்வானைத்திருப்பள்ளி மெத்தையாகவுடையனுமான எம்பெருமானது
பாதம், Paatham - திருவடிகளை
கொய் நாகம் பூ போது கொண்டு, Koyi Naagam Poo Podhu Kondo - கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக்கொண்டு
கைதொழுதும், Kaithozhudum - தொழுவோம்;
எழு, Ezu - எழுந்திரு;
இடர், Idar - (அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்) துக்கத்தை
படுவார் ஆர், Paduvaar Aar - அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.)