திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2162 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2162முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சம்சாரிகள் தம்தாமுக்குத் தாம்தாம் பண்ணிக் கொள்ளும் ஹிதம் சம்சாரத்தைக் கடத்துகை என்றொரு பேர் உண்டோ – அவன் திரு நாமத்தைச் சொல்லிப் பிழைத்துப் போம் இத்தனை போக்கி -என்கிறார் – ப்ரயோஜ நாந்தர பரர்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து சாவாமல் காக்கும் அவன் திரு நாமம் போக்கி இல்லை -என்கிறார் – 81
ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று, வாளமர் வேண்டி வரைநட்டு, – நீளரவைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப் பற்றிக் கடத்தும் படை?
பதவுரை Show / Hide
ஆள் அமர், Aal Amar - யுத்தவீரர்கள் நெருங்கியிருக்கப்பெற்றதும்
வென்றி, Vendri - ஜெயத்தையுடையதுமான
அடுகளத்துள், Adugalaththul - (எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்தகளத்திலே
அஞ்ஞான்று, Ajnjantru - (அசுரர்களைத் தேவர்கள் மேல்விழுந்து நலிந்த) அக்காலத்திலே
வாள் அமர் வேண்டி, Vaal Amar Vendi - (அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி.
வரை நட்டு, Varai Nattu - (அதற்கு ஏற்ப) (தண்ணீரில் அமிழக்கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாகநாட்டி.
நீள் அரவை சுற்றி, Neel Aravai Sutti - உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடைகயிறாகச் சுற்றி
கடைந்தான், Kadaindhaan - அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக்கடைந்தவனுடைய
பெயர், Peyar - திருநாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி, Patri - (ஸம்ஸாரிகளை) வாரிப்பிடியாகப் பிடித்துக் கொண்டுபோய்
தொல் நரகை, Thol Narakai - பழமையாயிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும், Kadaththum - தாண்டுவிக்கின்ற
படை, Padai - ஸாதனம்.