திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2162 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சம்சாரிகள் தம்தாமுக்குத் தாம்தாம் பண்ணிக் கொள்ளும் ஹிதம் சம்சாரத்தைக் கடத்துகை என்றொரு பேர் உண்டோ – அவன் திரு நாமத்தைச் சொல்லிப் பிழைத்துப் போம் இத்தனை போக்கி -என்கிறார் – ப்ரயோஜ நாந்தர பரர்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து சாவாமல் காக்கும் அவன் திரு நாமம் போக்கி இல்லை -என்கிறார் – 81 | ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று,
வாளமர் வேண்டி வரைநட்டு, – நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை? | பதவுரை Show / Hideஆள் அமர், Aal Amar - யுத்தவீரர்கள் நெருங்கியிருக்கப்பெற்றதும் வென்றி, Vendri - ஜெயத்தையுடையதுமான அடுகளத்துள், Adugalaththul - (எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்தகளத்திலே அஞ்ஞான்று, Ajnjantru - (அசுரர்களைத் தேவர்கள் மேல்விழுந்து நலிந்த) அக்காலத்திலே வாள் அமர் வேண்டி, Vaal Amar Vendi - (அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி. வரை நட்டு, Varai Nattu - (அதற்கு ஏற்ப) (தண்ணீரில் அமிழக்கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாகநாட்டி. நீள் அரவை சுற்றி, Neel Aravai Sutti - உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடைகயிறாகச் சுற்றி கடைந்தான், Kadaindhaan - அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக்கடைந்தவனுடைய பெயர், Peyar - திருநாமம் (எப்படிப்பட்ட தென்றால்) பற்றி, Patri - (ஸம்ஸாரிகளை) வாரிப்பிடியாகப் பிடித்துக் கொண்டுபோய் தொல் நரகை, Thol Narakai - பழமையாயிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை கடத்தும், Kadaththum - தாண்டுவிக்கின்ற படை, Padai - ஸாதனம். |