திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2166 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படிப் பட்ட அபரிச்சின்ன விஷயமான வைபவத்தை எல்லாம் கண்டு அனுபவித்தாயாய் ஏறிமறிந்து இருக்கிற நீ இன்னும் பேராது கண்டு அனுபவியாய் -என்ன என் செய நாம் எல்லாம் செய்தோமாய் அன்றோ இருக்கிறது என்ன இந்த்ரிய ஜெயம் பண்ணி ஆஸ்ரயணத்திலே இழிந்த வித்தனை யல்லது நீ அவன் படிகளிலே என் கண்டாய் என்கிறார் – 85 | படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட்
கொடிகண் டறிதியே? கூறாய், – வடிவில்
பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி,
நெறிநின்ற நெஞ்சமே நீ. | பதவுரை Show / Hideபொறி ஐந்தும், Porii Aindhum - பஞ்சேந்திரியங்களையும் வடிவில் உள் அடக்கி, Vadivil Ula Adakki - (வெளியில் மேயவொட்டாதபடி) சரீரத்திற்குள்ளே அடங்கியிருக்கச்செய்து போதொடு நீர் ஏந்தி, Pothodu Neer Aendhi - (திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக்கொண்டு நெறி, Neri - ஆச்ரயிக்கும் மார்க்கத்திலே நின்ற, Nindra - நிலைத்து நின்ற நெஞ்சமே, Nenjamai - மனமே! நீ, Nee - நீ பாம்பு அணையினான், Paambu Anaiyinan - சேஷ்ஷாயியான பெருமானுடைய புள் கோடி, Pul Kodi - கருடப்பறவையாகிற த்வஜத்தை கண்டு, Kandu - ஸேவித்து அறிதியே, Aridhiyey - அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி) படி, Padi - அவனது திருமேனியை கண்டு அறிதியே, Kandu Aridhiyey - ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? கூறாய், Kooraai - சொல்லு |