திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2167 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவருக்கு இப்படி நம்மால் அபேஷிதம் ஏது என்று பார்த்து அபேஷிதமான அவாவைத் தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு இவர் இருந்த இடத்திலே பிராட்டியும் தானுமாக நெருக்கப் புக்கார்கள் – இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து சாஷாத்கரித்ததது இல்லை இறே என்ன தரியான் இறே அவன் – 86 | நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா, – வாயில்
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி . | பதவுரை Show / Hideகுன்று, Kunru - கோவர்த்தன மலையை எடுத்து, Eduthu - வேரோடு பிடுங்கி யெடுத்து பாயும் பனி மறுத்த, Paayum Pani Maruttha - மேலேவந்து சொரிகிற மழையை மேலேவிழாமல் தடுத்த பண்பாளா, Panpaalaa - குணசாலியே! காமர் பூ கோவல், Kaamar Poo Koval - விரும்பத்தக்க அழகிய திருக்கோவலூரில், வாசல் கடை, Vaasal Kadai - திருவாசலுக்கு வெளியே. கழியா, Kazhiya - வெளிப்பட்டுப் போகாமலும் உள் புகா, Ul Pugaa - உள்ளே புகாமலும் இடைகழியே, Idaikazhiyey - நடுக்கட்டான இடை கழியிடத்தையே பற்றி, Patri - (பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கியிருந்ததனால்) விரும்பிய இடமாகக் கொண்டு நீயும் திருமகளும், Neeyum Thirumagalum - நீயும் பிராட்டியுமாக இனி, Ini - இப்போது நின்றாய், Nindraai - நின்றருளினாய்; ஆல், Aal - ஆச்சரியம்! |