திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2167 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2167முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவருக்கு இப்படி நம்மால் அபேஷிதம் ஏது என்று பார்த்து அபேஷிதமான அவாவைத் தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு இவர் இருந்த இடத்திலே பிராட்டியும் தானுமாக நெருக்கப் புக்கார்கள் – இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து சாஷாத்கரித்ததது இல்லை இறே என்ன தரியான் இறே அவன்   – 86
நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப் பாயும் பனிமறைத்த பண்பாளா, – வாயில் கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல் இடைகழியே பற்றி யினி .
பதவுரை Show / Hide
குன்று, Kunru - கோவர்த்தன மலையை
எடுத்து, Eduthu - வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த, Paayum Pani Maruttha - மேலேவந்து சொரிகிற மழையை மேலேவிழாமல் தடுத்த
பண்பாளா, Panpaalaa - குணசாலியே!
காமர் பூ கோவல், Kaamar Poo Koval - விரும்பத்தக்க அழகிய திருக்கோவலூரில்,
வாசல் கடை, Vaasal Kadai - திருவாசலுக்கு வெளியே.
கழியா, Kazhiya - வெளிப்பட்டுப் போகாமலும்
உள் புகா, Ul Pugaa - உள்ளே புகாமலும்
இடைகழியே, Idaikazhiyey - நடுக்கட்டான இடை கழியிடத்தையே
பற்றி, Patri - (பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கியிருந்ததனால்) விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும், Neeyum Thirumagalum - நீயும் பிராட்டியுமாக
இனி, Ini - இப்போது
நின்றாய், Nindraai - நின்றருளினாய்;
ஆல், Aal - ஆச்சரியம்!