திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2169 | முதல் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) - வழி பறிக்கும் நிலத்திலே -தம் தாம் கையிலே தனம் கொண்டு தப்புவாரைப் போலே என்னுடைய மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் விஷயம் இங்கே யாகப் பெற்றேனே என்கிறார் 88 | நாடிலும் நின்னடியே நாடுவன், நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும்
பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு,
என்னாகி லென்னே எனக்கு? | பதவுரை Show / Hideநாடிலும், Naadilaam - (மனத்தினால்) தேடும் போது நின் அடியே, Nin Adiye - உனது திருவடிகளையே நாடுவன், Naaduvan - தேடுவேன்; நாள் தோறும், Naal Thoram - எப்போதும் பாடிலும், Paadilaam - வாய்விட்டு ஏதாவது சொல்லும்போதும் நின் புகழே, Nin Pugazhe - உனது புகழ்களையே பாடுவன், Paaduvan - பாடுவேன்; சூடிலும், Soodilaam - ஏதாவதுதொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும் பொன் ஆழி ஏந்தினான், Pon Aazhi Aendhinaan - அழகிய திருவாழியைத்தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய பொன் அடியே, Pon Adiye - அழகிய திருவடிகளையே சூடுவேற்கு எனக்கு, Sooduveerkku Enakku - சிரோபூஷணமாகக் கொள்பவனான எனக்கு என் ஆகில் என், En Aakil En - எது எப்படியானாலென்ன? |