திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2173 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2173முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழே ஆஸ்ரிதரை ரஷிக்கும் படி சொல்லிற்று இங்கு அவாப்த சமஸ்த காமனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரிதர் உடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக நினைத்து இருக்கும் ஸ்வ பாவன் என்கிறது – அவ்வோ ஜன்மங்களில் அவதரித்து அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி – ஸ்ரீ வராஹமானான் ஆகில் கோரைக் கிழங்கு தாரகமாம் இடையனாகில் வெண்ணெய் தாரகமாம் – 92
வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய் தேனாகிப் பாலாம் திருமாலே, – ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள் மண்ணை உமிழ்ந்த வயிறு.
பதவுரை Show / Hide
வான் ஆகி, Vaan Aagi - ஆகாசமாகியும்
தீ ஆய், Thee Aay - அக்நியாகியும்
மறி கடல் ஆய், Mari Kadal Aay - அலையெறிகிற கடலாகியும்
மாருதம் ஆய், Maarudham Aay - காற்றாகியும்
தேன் ஆகி, Then Aagi - தேன்போன்றும்
பால் ஆம், Paal Aam - பால்போன்றும் பரம போக்யனான
திருமாலே, Thirumaalee - எம்பெருமானே!
முன் ஒருநாள், Mun Orunaal - பிரளயம் நீங்கின காலத்திலே
மண்ணை, Mannai - (பிரளயகாலத்தில் உட்கொண்டிருந்த) இவ்வண்டத்தை
உமிழ்ந்த-, Umizhndha - (உள்ளேயே கிடந்து தளர்ந்து போகாதபடி) வெளிவிட்ட
வயிறு, Vayiru - உன் வயிறானது
ஆன் ஆய்ச்சி வெண்ணெய், Aan Aaychchi Vennyei - இடைக் குலத்திற் பிறந்தவளான யசோதையென்னும் இடைச்சி கடைந்துவைத்த வெண்ணெயை
விழுங்க, Vizhunga - அள்ளி அமுது செய்ததினால்
நிறையுமே, Niraiyumee - நிறைந்துவிடுமோ? [நிறைய மாட்டாது]