திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2174 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2174முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழே ஆஸ்ரித விஷயத்திலே ஒரு பஷ பாதம் சொல்லிற்றே நின்றது நீர் சொல்லுகிற பஷ பாதம் நாம் அறிகிறிலோமீ -என்ன இல்லையாகில் நீ வெருமனேயோ ஹிரண்யன்  மேலே சீறினாயோ அவனுக்கு எதிரியாகப் போரும்படியாய்ச் சீறினாயோ-என்கிறார்- கீழில் பாட்டில்-வாத்சல்யமாய் வாத்சல்ய கார்யமான சீற்றத்தை அனுபவிக்கிறார்  – 93
வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச எயிறிலக வாய்மடுத்த தென்நீ, – பொறியுகிரால் பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின் சேவடிமே லீடழியச் செற்று.
பதவுரை Show / Hide
பூ வடிவை ஈடு அழித்த, Poo Vadivai Eedu Azhitha - புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான]
பொன் ஆழி கையா, Pon Aazhi Kaiyaa - அழகிய திருவாழியைக்கொண்ட திருக்கையையுடையவனே!
வயிறு அழல, Vayiru Azhala - (என்ன தீங்கு நேருமோவென்று அநுகூலர்) வயிறெரியும்படி
வாள் உருவி வந்தானை, Vaal Uruvi Vandhaanai - வாளை உருவிக்கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அஞ்ச, Anja - (அவன் உன் வடிவத்தைக்கண்டு) நடுங்கும்படி
நின் சேவடி மேல், Nin Saevadi Mael - உனது திருவடிகளின்மேலே (போட்டுக்கொண்டு)
பொறி உகிரால், Pori Ukiraal - நாநாவர்ணமான நகங்களினால்
ஈரு அழிய செற்று, Eeru Azhiy Settru - கட்டுக்குலைந்து போம்படி கொன்று
எயிறு இலக, Eiyiru Ilaka - (பின்னையும் சீற்றம் மாறாமையால்) பற்கள் வெளித்தெரியும்படி
நீ வாய் மடித்தது, Nee Vaai Madiththathu - நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது
என், En - ஏதுக்காக?.