திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2176 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2176முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் நா அவனை ஒழிய ஷண காலமும் ஏத்தாது என்றாரே பாவியேன் இப்படிப் பட்ட கரணங்களைக் கொண்டு சேதனர் சம்சாரத்துக்குப் பரிகரம் ஆக்கிக் கொண்டபடி என் என்று விஸ்மிதர் ஆகிறார் – 95
நாவாயி லுண்டே நமோநார ணா என்று, ஓவா துரைக்கு முரையுண்டே, – மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர் தீக்கதிக்கட் செல்லும் திறம்.
பதவுரை Show / Hide
நா, Naa - (ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான) நாக்கானது
வாயில் உண்டே, Vaayil Undae - (ச்ரமப்பட்டுத் தேடவேண்டாதபடி ) ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப்பட்டிருக்கின்றதே;
ஓவாது, Ovaadhu - (ஸஹஸ்ராக்ஷரீமாலா மந்த்ரம்போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல்
உரைக்கும், Uraikkum - (எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக்கூடிய
நமோ நாரணாய என்று உரை, Namo Naaraanaaya Endru Urai - திருவஷ்டாக்ஷர மந்த்ரம்
உண்டே, Undae - ஸித்தமாயிருக்கின்றதே;
மூவாத, Moovaadha - கிழத்தன்மையற்ற [திரும்பிவருதலில்லாத]
மா கதிக்கண், Maa Kathikkan - பரமப்ராப்யமான மோக்ஷத்திலே
செல்லும் வகையுண்டே, Sellum Vagaiyundae - சென்று சேர்வதற்கேற்ற உபாயம் உண்டே;
தீக்கதிக்கண், Theekathikkan - (இப்படியிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்) விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே சிலர்
செல்லும் திறம் என், Sellum Thiram En - போய் விழுகிறபடி என்னோ!.