திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2176 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் நா அவனை ஒழிய ஷண காலமும் ஏத்தாது என்றாரே பாவியேன் இப்படிப் பட்ட கரணங்களைக் கொண்டு சேதனர் சம்சாரத்துக்குப் பரிகரம் ஆக்கிக் கொண்டபடி என் என்று விஸ்மிதர் ஆகிறார் – 95 | நாவாயி லுண்டே நமோநார ணா என்று,
ஓவா துரைக்கு முரையுண்டே, – மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர்
தீக்கதிக்கட் செல்லும் திறம். | பதவுரை Show / Hideநா, Naa - (ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான) நாக்கானது வாயில் உண்டே, Vaayil Undae - (ச்ரமப்பட்டுத் தேடவேண்டாதபடி ) ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப்பட்டிருக்கின்றதே; ஓவாது, Ovaadhu - (ஸஹஸ்ராக்ஷரீமாலா மந்த்ரம்போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல் உரைக்கும், Uraikkum - (எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக்கூடிய நமோ நாரணாய என்று உரை, Namo Naaraanaaya Endru Urai - திருவஷ்டாக்ஷர மந்த்ரம் உண்டே, Undae - ஸித்தமாயிருக்கின்றதே; மூவாத, Moovaadha - கிழத்தன்மையற்ற [திரும்பிவருதலில்லாத] மா கதிக்கண், Maa Kathikkan - பரமப்ராப்யமான மோக்ஷத்திலே செல்லும் வகையுண்டே, Sellum Vagaiyundae - சென்று சேர்வதற்கேற்ற உபாயம் உண்டே; தீக்கதிக்கண், Theekathikkan - (இப்படியிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்) விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே சிலர் செல்லும் திறம் என், Sellum Thiram En - போய் விழுகிறபடி என்னோ!. |