திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2177 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சேதனர் செய்தபடி செய்ய நெஞ்சே நீ முன்பு நான் சொல்லுகிற இத்தை அழகிதாக புத்தி பண்ணு என்கிறார் – 96 | திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்,
அறம்பாவ மென்றிரண்டு மாவான், – புறந்தானிம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,
கண்டாய் கடைக்கட் பிடி. | பதவுரை Show / Hideஎன் நெஞ்சமே, En Nenjamai - எனது மனமே! அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான், Aram Paavam Endra Irandum Aavaan - புண்யம் பாபம் எனப்படுகின்ற இருவகைக் கருமங்களுக்கும் நிர்வாஹகன் செம் கண் மால் கண்டாய், Sem Kan Maal Kandaai - புண்டரீகாக்ஷனான எம்பெருமானே யாவன்; இம்மண் தான், Imman Thaan - இந்தப்பூமியும் மரி கடல் தான், Mari Kadal Thaan - அலையெறிகிற கடலும் மாருதம் தான், Maarudham Thaan - வாயுவும் வான், Vaan - ஆகாசமும் புறம் தான், Puram Thaan - இவை தவிரவுள்ள மஹாந் முதலிய தத்துவங்களும் தானே கண்டாய், Thane Kandaai - (ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்) அந்தத் திருமாலேயாவன்; கடைக்கண், Kadaikkan - முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில் திறம்பாது, Thirampadhu - (இதுவே உண்மையென்பதை) தவறாமல் பிடி, Pidi - உறுதியாகக்கொள். |