திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2179 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2179முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவிர் சடை மேல் பாய்ந்த -என்று கொண்டு அவன் திருவடிகளிலே ஒரு சம்பந்தம் உடைய கங்கையை இவன் ஜடையிலே தரித்தான் என்று இவனைக் குறையச் சொல்லுகிறது என்- அவனைத் தனியே ஈஸ்வரனாகவும் அவன் ஒரு கார்யத்துக்குக் கடவனாகவும் அன்றோ சொல்லுகிறது என்னில் அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே  வந்தது அத்தனை போக–ஸ்வத இல்லை -என்கிறார் – 98
பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும், நின்றுலகம் தாய நெடுமாலும், – என்றும் இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன் ஒருவனங்கத் தென்று முளன்.
பதவுரை Show / Hide
பொன் திகழும் மேனி, Pon Thigazhum Meeni - பொன்போல விளங்குகின்ற உடலையும்
புரி சடை, Puri Sadai - பினின சடைமுடியையுமுடையவனாய்
அம், Am - அழகிய,
புண்ணியனும், Punniyanum - (ஸாதநாநுஷ்டானமாகிற ) புண்ணியத்தையடையனான ருத்ரனும்
நின்று உலகம் தாய நெடு மாலும், Ninru Ulagam Thaaya Nedumaalum - நின்று உலகங்களையெல்லாம் அளந்துகொண்ட ஸர்வேச்வரனும்
என்றும், Endrum - எக்காலத்திலும்
இருவர் அங்கத்தால் திரிவர் ஏலும், Irivar Angathaal Thirivar Aelum - இருவராகி வெவ்வெறு வடிவத்தைக்கொண்டு இருந்தார்களேயானாலும்
ஒருவன், Oruvan - சடைபுனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்
ஒருவன் அங்கத்து, Oruvan Angathu - நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே
என்றும், Endrum - எப்போதும்
உளன், Ulan - ஸத்தை பெற்றிருப்பன்.