திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2180 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி சர்வ ரஷகனான சர்வேஸ்வரன் திருப்பாற் கடல் தொடக்க மானவற்றிலே வந்து சந்நிஹிதானாய்த்துத் தான் ஏது என்னில் விலக்காதார் நெஞ்சு பெருந்தனையும் கிடாய் – ஆன பின்பு -நெஞ்சே நீ இத்தை புத்தி பண்ணு -என்கிறார் – நாட்டில் பெரியராய் இருக்கிறவர்களும் தங்களுக்கேற ஷேத்ரஞ்ஞர்கள் ஆனவர் இருக்கச் செய்தே ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு திரு உள்ளம் பயப்பட நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால் அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் – என்கிறார் – 99 | உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்
உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் – துளன்கண்டாய்,
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தி னுள்ளனென் றோர். | பதவுரை Show / Hideநல் நெஞ்சே, Nal Nenjee - எனக்குப் பாங்கான மனமே! உத்தமன், Uthaman - புருஷோத்தமனான எம்பெருமான் உளன்கண்டாய், Ulan Kandai - (நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்; என்றும் உளன் கண்டாய், Endrum Ulan Kandai - எக்காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷைகொண்டு) இருக்கிறான் காண்; உள்ளுவார் உள்ளத்து, Ulluvaar Ullaththu - ஆஸ்திகர்களுடைய மனத்திலே உளன், Ulan - நித்யவாளம் கண்டாய், Kandai - பண்ணுமவன் காண்; வெள்ளத்தின் உள்ளானும், Vellaththin Ullaanum - திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருள்பவனும் வேங்கடத்து மேயானும், Vengadathu Meyaanum - திருமலையிலே நிற்பவனும் உள்ளத்தின் உள்ளான் என்று, Ullaththin Ullaan Endru - இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்யவாஸம் பண்ணுகிறானென்று ஓர், Oru - தெரிந்துகொள். |