Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 222 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
222ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 10
அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கை நல் லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கவர் சொல்லைப் புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே–2-10-10
நல் மங்கைமார்கள் தாம்,Nal Mangaimargal Thaam - (பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள்
அம் கமலம்,Am Kamalam - அழகிய செந்தாமரைப் பூப்போன்ற
கண்ணன் தன்னை,Kannan Thannai - கண்களை யுடைய கண்ணபிரான் (செய்த தீம்பு) விஷயமாக
அங்கு வந்து,Angu Vandhu - அந்தக் கண்ண பிரானுடைய வீட்டுக்கு வந்து
அசோதைக்கு,Asothaiyukku - (அவன் தாயான) யசோதைப் பிராட்டி யிடத்திலே
முற்பட்ட,Murppatta - (தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன
அவர் சொல்லை,Avar Sollai - அவ் விடைச்சிகளின் சொல்லை,
புதுவை,Puthuavai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்,Kon - நிர்வாஹகரான
பட்டன்,Pattam - பெரியாழ்வார்
சொல்,Sol - அருளிச் செய்த
இவை,Evai - இப் பாசுரங்களை
இங்கு,Engu - இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே)
வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு
ஒன்று ஏதம்,Onru Aedham - ஒரு வகைக் குற்றமும்
இல்லை,ellai - இல்லையாம்.