| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 223 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 1 | தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான் பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1-1 | தன் நேர்,Than Ner - (வயஸ்ஸாலும் வளர்த்தியாலும்) தன்னோடு ஒத்த ஆயிரம் பிள்ளைகளோடு,Ayiram Pillaihalodu - ஆயிரம் பிள்ளைகளோடு கூட தளர் நடை இட்டு,Thalar Nadai Ittu - தளர் நடை நடந்து வருவான் ,Varuvaan - வருகின்ற கண்ணபிரானே! பொன் ஏய்,Pon Ey - (நிறத்தால்) பொன்னை ஒத்திரா நின்ற நெய்யோடு,Neyyodu - நெய்யோடு கூட பால் அமுது,Paal Amuthu - போக்யமான பாலையும் உண்டு,Undu - (இடைச்சேரியில் களவு கண்டு) அமுது செய்து பொய்யே,Poiye - (ஒன்றுமறியாத பிள்ளை போல்) கபடமாக தவழும்,Thavazhum - தவழ்ந்து வருகின்ற ஒரு புள்ளுவநொப்பற்ற கள்ளனே! மின் நேர்,Min Ner - மின்னலைப் போன்று நுண்,Nun - அதி ஸூக்ஷ்மமான இடை,Idai - இடையையும் வஞ்சம்,Vanjam - வஞ்சனையையுமுடையளான மகள்,Magal - பூதனை யென்னும் பேய் மகள் துஞ்ச,Thunja - மாண்டு போம்படி கொங்கை,Kongai - (அவளுடைய) முலையிலே வாய் வைத்த,Vaai Vaitha - தன்னுடைய வாயை வைத்து (சுவைத்து) பிரானே,Pranane - நாயனே உன்னை,Unnai - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை அறிந்து கொண்டேன்,Arindhu Kondean - (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு,Unakku - (ஆதலால் ) உனக்கு அம்மம் தர,Ammam Thara - முலை கொடுக்க அஞ்சுவன்,Anjuvan - பயப்படா நின்றேன் அன்னே,Anne - அன்னே- அச்சக் குறிப்பிடைச் சொல் |