Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 227 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
227ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 5
முப்போதும் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி
கப்பாலாயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி
மெய்ப்பாலுண்டழு பிள்ளைகள் போலந விம்மி விம்மி யழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-5
முப்போதும்,Muppothum - மூன்று சந்திப் போதுகளிலும்
கடைந்து,Kadaindhu - (இடையரால்) கடையப் பட்டு
ஈண்டிய,Eindiya - திரண்ட
வெண்ணெயினோடு,Venneyinodu - வெண்ணையையும்
தயிரும்,Thayirum - தயிரையும்
விழுங்கி,Vizhunki - (களவு கண்டு) விழுங்கி,
ஆயர்கள்,Aayargal - (அவ்வளவோடும் நில்லாமல்) அவ்விடையர்கள் (தம்முடைய)
கப்பால்,Kappal - தோளாலே (வருந்திச் சுமந்து)
காவில்,Kavil - காவடியில்
கொணர்ந்த,Konarntha - கொண்டு வந்த பால் முதலியவற்றை
கலத்தொடு,Kalathodu - (அந்தப்) பாத்திரத்தோடே
சாய்த்து,Saithu - சாய்த்து
பருகி,Parugi - குடித்தும்
மெய் பால் உண்டு அழுகிற பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற,Mei Paal Undu Alugira Pillaihal Pola Vimmi Vimmi Alugindra - (அதனால் பசி யடங்கின படியை மறைக்க நினைத்து) முலைப் பாலை உண்டு (அது பெறாதபோது) அழுகிற பிள்ளைகளைப் போலே விக்கி அழுகின்ற
அப்பா,Appa - பெரியோனே!
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்