| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2282 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – எம்பெருமான் கடல் கடைய தேவர்கள் நடு நின்றால் போலே முன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் – அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் – 1 | திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழு மருக்கனணிநிறமுங் கண்டேன்* செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்* என்னாழி வண்ணன்பா லின்று | இன்று, Indru - எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம்பெற்ற இப்பொது என் ஆழி வண்ணன் பால், En Aazhi Vannan Paal - கடல்வண்ணனான எம்பெருமானிடத்திலே திரு, Thiru - பெரிய பிராட்டியாரை கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன், பொன் மேனி, Pon Meeni - அழகிய திருமேனியையும் கண்டேன், Kandeen - ஸேவிக்கப் பெற்றேன் திகழும், Thigazhum - விளங்குகின்ற அருக்கன், Arukkan - ஸூர்யன்போன்று அணி, Ani - உஜ்வலமான நிறமும், Niramum - ப்ரகாசத்தையும் கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன் செரு, Seru - யுத்த பூமியிலே கிளரும், Kilarum - பராக்ரமங்காட்டுகின்ற பொன் ஆழி, Pon Aazhi - அழகிய திருவாழியையும் கை, Kai - திருக்கையில் கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன் புரி சங்கம், Puri Sangam - வலம்புரிச்சங்கையும் (மற்றொரு திருக்கையிலே) கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன். |