| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2283 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ———— அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போய்த்து என்கிறார் – கைங்கர்யமே யாத்ரையாம் படி யாயிற்று – அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் – 2 | இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன், பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், – அன்று திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை மருக்கண்டு கொண்டேன் மனம். | பொன் தோய், Pon Thoy - பொன்மயமான பூஷணங்கள் சேரப்பெற்றதும் வரை, Varai - மலைபோன்றது மான மார்பில், Marbil - திருமார்பில் (சாத்தப்பட்டிருந்த) பூத்துழாய், Poothuzhai - திருத்துழாயை அன்று, Andru - கடல்கடைந்த வக்காலத்தில் திரு, Thiru - பெரியபிராட்டியார் கண்டு கொண்ட, Kandu Konda - அநுபவிக்கும்படியாக பெற்ற திருமாலை, Thirumalai - லக்ஷமீநாதனே! என் மனம், En Manam - அடியேனுடைய மனமானது உன்னை, Unnai - உன்னிடத்தே மருக்கண்டு கொண்டு, Marukkandu Konda - பொருத்தப்பெற்றதனால் இன்றே, Indre - இன்று கழல், Kazhal - உனது திருவடிகளை கண்டேன், Kandeen - கண்டு அநுபவிக்கப் பெற்றேன், ஏழ்பிறப்பும், Ezhipirappum - ஜந்மப்ரம்பரைகளையெல்லாம் அறுத்தேன், Arutthen - (இனிமேல் தொடராதபடி) ஒழித்திட்டேன் |