Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2284 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2284மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ் இவருடைய மனஸ்ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று அவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மருவினபடி சொல்லிற்று – அவன் இவருடைய மனசை யல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் – இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவிக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் – 3
மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், – சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,
வருநரகம் தீர்க்கும் மருந்து.
மாகடல் நீர் உள்ளான், Makadal Neer Ullan - பெரிய திருப்பாற்கடல் நீரிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும்
மலராள் தனத்து உள்ளான், Malaral Thanathu Ullan - பிராட்டியின் திருமுலைத்தடத்திலே அடங்கிக் கிடப்பவனும்
தண் துழாய் மார்பன், Than Thuzhai Marban - குளிர்ந்த திருத்துழாயைத் திருமார்பிலணிந்தவனும்,
செருநர், Serunar - சத்துருக்கனானவர்கள்
உக, Uga - அழியும்படி
சினத்து, Sinatthu - சீற்றத்தினாலே
செற்று, Settru - த்வம்ஸம்பண்ணி
உகந்த, Ugandha - மகிழ்ந்தவனும்
தேங்கு ஓதம் வண்ணம், Thengu Otham Vannam - தேங்கின கடல் போன்ற வடிவையுடையவனும்
வரு நாகம் தீர்க்கும் மருந்து, Varu Naagam Theerkum Marundhu - தப்பாமல் நேரக்கூடிய ஸம்ஸாரமாகிற நாகத்தைப் போக்கவல்ல மருந்து போன்றவனுமான ஸர்வேச்வான்
மனத்து உள்ளான், Manaththu Ullaan - என்மனத்திலே வந்து சேர்ந்துவிட்டான்