| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2285 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – சர்வ ரஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் – கீழ் –தமக்குச் செய்த படி சொன்னார் – இதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –அது ஸ்வஜன ரஷணம் – சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் – 4 | மருந்தும் பொருளும் அமுதமும் தானே, திருந்திய செங்கண்மா லாங்கே, – பொருந்தியும் நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால், அன்றுலகம் தாயோன் அடி. | திருந்திய, Thirundhiya - இவனே பரமபுருஷனென்று தெளிவாகக் கண்டு கொள்வதற்குக் காரணமான செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருகண்களையுடைய மால், Maal - ஸர்வேச்வரனாயும் ஆங்கே, Aange - உலகத்தைக் காத்தருள்வதாகிய அக்காரியமொன்றிலேயே நின்று பொருந்திய, Ninru Porundhiya - நிலைநின்று பொருந்தினவனாயும் உலகம், Ulagam - உலகங்களை உண்டு, Undu - பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாயும் அன்று, Andru - முன்பொரு காலத்தில் நீர் ஏற்று, Neer Aetru - (மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்று மூ அடியால் உலகம் தாயோன், Moo Adiyaal Ulagam Thaayon - மூவடியாலே உலகங்களை யெல்லாம் தாவியளந்தவனாயுமுள்ள எம்பெருமானுடைய அடி தானே, Adi Thane - திருவடிகளே மருந்தும், Marundhum - மருந்துபோலே ஸம்ஸாரவியாதியைத் தொலைப்பனவாயும் பொருளும், Porulum - பணம்போலே வேண்டியவற்றைப் பெறுவிப்பனவாயும் அமுதமும், Amudhamum - அமிருதம்போலே போக்யமாயுமிருக்கின்றன. |