| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2286 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்துத்தமானவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் – அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே இனி அழகை அனுபவிப்போம் என்கை- அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது –அலமாப்பாலே இறே- அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது பேச ஒண்ணாது – திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆனவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் – 5 | அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன், படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், – முடிவண்ணம் ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே ஆராழி கொண்டாற் கழகு. | அன்று உலகம் தாயோன், Andru Ulagam Thaayon - முன்பு உலகங்களைத் தாலியளந்த பெருமானுடைய அடி வண்ணம், Adi Vannam - திருவடிகளின் நிறம் தாமரை, Thamarai - தாமரைப்போலே சிவந்திராநின்றது படி வண்ணம், Padi Vannam - திருமேனியின் நிறம் பார் கடல் நீர் வண்ணம், Paar Kadal Neer Vannam - பூமயைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுதுதுக் குளிர்திராநின்றது. முடி வண்ணம், Mudi Vannam - கிரீடத்தினுடைய நிறம் ஓர் ஆழி வெய்யோன், Oru Aazhi Veyyon - ஒற்றைச்சக்கர முடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது, ஒளியும், Oliyum - (அப்பெருமானுடைய) தேஜஸ்ஸும் அஃது அன்றே, Azhthu Andrae - அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதே யன்றோ ஆர் ஆழி கொண்டாற்கு அழகு, Aar Aazhi Kondaarku Azhagu - அழகு பொருந்திய திருவாழியைக் கையில் கொண்டுள்ள பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாயிராநின்றது. |