| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2287 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் – கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் 6 | அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம், அழகன்றே யண்டம் கடத்தல், – அழகன்றே அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ, கங்கைநீர் கான்ற கழல். | ஆழியாற்கு, Aazhiyaarku - திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு ஆழி நீர் வண்ணம், Aazhi Neer Vannam - கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது அழகு அன்றே, Azhagu Andrae - மிகவுமழகிய நிறமன்றோ, அண்டம் கடத்தல், Andam Kadaththal - மேலுலகங்களை அளந்து கொண்டது அழகு அன்றே, Azhagu Andrae - அழகன்றோ அங்கை, Angai - உள்ளங்கையிலே நீர் ஏற்றாற்கு, Neer Aetrarku - மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு அலர் மேலான், Alar Melan - பிரமன் கால் கழுவ, Kaal Kazhuva - திருவடிகளை விளக்க, (அப்போது) கங்கை நீர், Gangai Neer - கங்காதீர்த்தத்தை கான்ற, Kaandru - வெளிப்படுத்திய கழல், Kazhal - அத்திருவடி அழகு அன்றே, Azhagu Andrae - அழகன்றோ |