| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2289 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – எல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் – எல்லா இந்திரியங்களும் அவனை அனுசந்திக்க வேணும் என்கிறார் – எல்லா இந்திரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் – 8 | நாமம் பலசொல்லி நாராய ணாவென்று, நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. – வா,மருவி மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய், கண்ணனையே காண்கநங் கண். | நல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே! நாராயணா என்று பல நாமம் சொல்லி, Naarayana Enru Pala Naamam Solli - நாராயணன் முதலாகவுள்ள பல திருநாமங்களைச் சொல்லி அம் கையால், Am Kaiyhaal - அழகியகையினாலே நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் தொழுவோம் மருவி வா, Maruvi Vaa - இதற்கு நீயும் உடன்பட்டுவர மண் உலகம், Man Ulagam - பூமி முதலிய லோகங்களை உண்டு உமிழ்ந்த, Undu Umizhndha - ஒருகால் உள்ளே அடக்கிவைத்துப் பிறகு வெளிப்படுத்தினவனும் வண்டு அளையும் தண் துழாய், Vandu Alaiyum Than Thuzhai - வண்டுகள் படித்து ஒலிசெய்யபெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனுமான கண்ணனையே, Kannaniye - கண்ணபிரானையே நம் கண், Nam Kan - நமது கண்கள் காண்க, Kaanng - கண்டு களித்திடுக |