| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2290 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – காண்க நம் கண் என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் – காண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் 9 | கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும், மண்ணளந்த பாதமும் மற்றவையே,- எண்ணில் கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன், திருமா மணிவண்ணன் தேசு. | கரு மாமுகில் வண்ணன், Karum Maamugil Vannan - கரிய பெரிய மேகம் போன்ற வடிவையுடையவனும் கார் கடல் நீர் வண்ணன், Kaar Kadal Neer Vannan - கரியகடல் நீரின் நிறம்போன்ற நிறமுடையவனும் திரு மா மணி வண்ணன், Thiru Maa Mani Vannan - அழகிய நீலமணி போன்றவனுமான எம்பெருமானுடைய தேசு, Desu - அழகை எண்ணில், Ennil - ஆராய்ந்து நோக்குமளவில், கண்ணும், Kannum - திருக்கண்ணும் கமலம், Kamalum - தாமரைப்பூப்போன்றவை கைத் தலமும், Kait Thalum - திருக்கைத்தலங்களும் கமலயே, Kamalaye - அத்தாமரைப் பூப்போன்றவையே மண் அளந்த பரதமும், Man Alandha Bharathamum - உலகளந்த திருவடிகளும் அவையே, Avaiye - அத்தாமரைப் பூப்போன்றவையே. |