| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2292 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கூரிதான அறிவை உடையார்க்கு அல்லது போக்கி அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது கிடீர் -என்கிறார் அவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –என்கிறார் – அவன் திரு நாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை -அல்லாதார்க்கு துர்ஜ்ஜேயன்-என்கிறது – கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் – 11 | நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும் பொங்கோ தருவிப் புனல்வண்ணன், – சங்கோதப் பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப்பார் நூற்கடலான் நுண்ணறிவி னான். | நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான், Nangku Oodhum Naal Vedathu Ullaan - நன்றாக ஓதப்படுகிற நான்கு வேதங்களாலும் பிரதி பாதிக்கப்படுபவனும் நறவு இரியும், Naravu Irikum - தேன் தோற்கும்படியான போக்யதையை யுடையதாய் பொங்கு ஓதம் அருவி புனல், Pongu Oodham Aruvi Punal - கடல் போலவும் அருவிநீர் போலவுமுள்ளதான வண்ணன், Vannaan - திருமேனியை யுடையவனும் சங்கு ஓதம் பால் கடலான், Sangu Oodham Paal Kadalaan - சங்குகளோடே கூடின அலைகளை யுடைத்தான திருப்பாற்கடலில் கண்வளர்த்தருள்பவனும் பாம்பு அணையின் மேலான், Paambu Anaithin Melan - சேஷ சயனத்தின் மேல் துயில்பவனும் பயின்று உரைப்பார் நூல் கடலான், Payinru Uraippaar Nool Kadalaan - ஓதியுணர்த்துகின்ற வைதிகர்களின் கடல்போன்ற சாஸ்த்ரங்களால் பிரதபாதிக்கப்படுபவனுமான எம்பெருமான் நுண் அறிவினான், Nun Arivinaan - (தம் முயற்சியாலே அறிவார்க்கு) அறிய முடியாதவன். |