| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2293 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய் விட ஒண்ணாதோ என்னில் நான் சொல்லுகிற வழியாலே காண்பாருக்குக் காணலாம் -என்கிறார் – இப் பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை உபபாதிக்கிறார் – ஒருத்தருக்கும் அறியப் போகாதோ என்னில் -இப்படி அறிவிற்கு அறியலாம் என்கிறது – ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில் நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் – 12 | அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில், செறிவென்னும் திண்கதவம் செம்மி, – மறையென்றும் நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும் பைங்கோத வண்ணன் படி. | மறை, Marai - வேதத்தை என்றும், Endrum - இடைவிடாது நன்கு ஓதி, Nangu Othi - நன்றாக அத்யயநம் பண்ணி அறிவு என்னும், Arivu Ennum - ஜ்ஞாநமாகிற தாள் கொளுவி, Thaal Koluvi - தாழ்ப்பாளையிட்டு ஐம்புலனும், Aimpulanum - பஞ்சேந்திரயங்களையும் தம்மில் செறிவு என்னும், Thammil Serivu Ennum - (வெளிச்சொல்லாமல்) உள்ளே அடக்கிவைப்பதாகிற. திண் கதவம் செம்மி, Thin Kathavam Semmi - திடமான கதவையடைத்து நன்கு உணர்வார், Nangu Unarvaar - நன்றாக தியானிக்குமவர்கள் பைங்கோதம் வண்ணன்படி, Paingotham Vannampadi - அழகிய கடலின் நிறம்போன்ற நிறமுடையனான எம்பெருமானது தன்மைகளை நாள்தோறும், Naalthorum - தினந்தோறும் காண்பர், Kaanbar - ஸாக்ஷித்தகரிப்பான் |