| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2294 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று – இதில்-அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை என்கிறார் – அன்றிக்கே இப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் – இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்- 13 | படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று, அடிவட்டத் தாலளப்ப நீண்ட – முடிவட்டம், ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே, மாகாய மாய்நின்ற மாற்கு. | பண்டு, Pandhu - முன்னொரு காலத்தில், உலகம் நீர் ஏற்று, Ulagam Neer Aetru - பூமி தானம் வாங்கிக்கொண்டு தாமரை படிவட்டம், Thamarai Padivattam - தாமரை மலர்ந்தாற் போலே வட்ட வடிவமாயிருக்கிற பூமியை அடி வட்டத்தால் அளப்ப, Adi Vattathaal Alappa - திருவடியினால் அளப்பதற்காக மா காயம் ஆய் நின்றமாற்கு, Maa Kaayam Aay Nindramarku - பெரிய திருமேனியாய் (த்ரிவிக்ரமனாய்) வளர்ந்து நின்ற எம்பெருமானுடைய, நீண்ட முடி வட்டம், Neenda Mudi Vattam - நீண்ட திருவபிஷேகமானது ஆகாயம் ஊடு அறுத்து, Aakaayam Oodu Aruththu - மேலுலகங்களின் வழியாகச் சென்று அண்டம் போய் நீண்டதே, Andam Poi Neendadhe - அண்ட கடாஹத்தளவாக வளர்ந்த்தே! இஃது என்ன ஆச்சரியம்! |