| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2297 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் – மனந்தன் அணைக் கிடக்கும் -என்றாரே-இப்படி வந்து கிடைக்கைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் – இப்படி வந்து தங்குகைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோடே இருக்கை என்கிறார் – ஸ்ரீ திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது ஸ்ரீ திருவல்லிக் கேணியிலே வந்து தங்கினான் -என்கிறார் – 16 | வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம் அந்தி விளக்கும் அணிவிளக் காம், – எந்தை ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன், திருவல்லிக் கேணியான் சென்று. | ஒரு அல்லி தாமரையாள், Oru Alli Thamaraiyal - அழகிய இதழ்களையுடைய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பிராட்டி சென்று ஒன்றிய சீர் மார்பன், Senru Onriya Seer Marban - வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும் வந்து உதைத்த வெண்திரைகள் செம் பவளம் வெண் முத்தம், Vandu Uthaitha Venthiraihal Sem Pavalam Ven Muththam - வந்து வீசுகின்ற வெளுத்த அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும் அந்த விளக்கும் அணி விளக்குஆம், Andha Vilakkum Ani Vilakkuam - ஸ்ந்தியாகாலத்தை விளக்குகின்ற மங்களதீபங்களாக ஆகப்பெற்ற திருவல்லிக்கேணியான், Thiruvallikeniyaan - திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான் எந்தை, Endhai - எனக்கு ஸ்வாமி |