| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2299 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு உன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே யாத்ரையாய் இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி பண்ணி யருள வேணும் -என்கிறார் – உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –என்கிறார் – மறவாது என்றும் நான் நினைத்தால் லாபம் உண்டோ –நீ அஞ்சாது இருக்க அருள் என்கிறார் – உன்னுடைமையை ஒன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் – கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் – 18 | வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண் நீயளந்து கொண்ட நெடுமாலே, – தாவியநின் எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி, அஞ்சா திருக்க அருள். | வாமனன் ஆய், Vaamanan Aayi - வாமநரூபியாகி மாவலி பால், Mavali Paal - மஹாபலியினிடத்தில் (சென்று) வா மொழிந்து, Vaa Mozhinthu - (மதுரமான சில) வாய்மொழிகளைச் சொல்லி மூ அடி மண், Moo Adi Mann - மூவடிநிலத்தை (இரந்து பெற்று) அளந்து கொண்ட, Alanthu Konda - அதை அளந்து கொண்ட நெடு மாலே, Nedu Maale - ஸர்வேச்வரனே! எஞசா, Enjasa - கருங்குதலின்றி தாலிய, Thaliya - ஸர்வவ்யாபியான நின் இணை அடிக்கே, Nin Inai Adikke - உனது உபய பாதங்களுக்கே ஏழ் பிறப்பும், Ezha Pirappum - எல்லா பிறவிகளிலும் ஆள் ஆகி, Aal Aagi - நான் ஆட்பட்டவனாகி அஞ்சாது இருக்க, Anjaadhu Irukka - பயங்கெட்டிருக்கும் படி நீ அருள், Nee Arul - நீ கிருபைபண்ணவேணும். |