| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 23 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 1 | சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1 | சீதம்,Seetham - குளிர்ந்திரா நின்றுள்ள கடல்,Kadal - திருப்பாற்கடலிலே உன் அமுது அன்ன,Un amuthu anna - உள்ளமுதாகப் பிறந்த பிராட்டியோடொத்த தேவகி,Devaki - தேவகிப் பிராட்டியால் கோதை குழலான் அசோதைக்கு போத்தந்த,Kothai kuzhalan asothai ku pothantha - பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட கேச பாசத்தை யுடைய யசோதைப் பிராட்டிக்குப் போகவிடப்பட்டவனாய் பேதை,Pethai - அறிவின்மையை யுடையனாய் குழவி,Kuzhavi - சிசுவான கண்ணபிரான் பிடித்து,Pidithu - (தன் கைகளால்) பிடித்து சுவைத்து,Suvaithu - ருசி பார்த்து உண்ணும்,Unnum - திருப்பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள பாதம் கமலங்கள்,Paatham kamalangal - திருவடித் தாமரைகளை. காணீர்,Kanneer - வந்து காணுங்கோள். பவளம்,Pavalam - பவளம் போல் சிவந்த வாயீர்,Vaayir - அதரத்தையுடைய பெண் காள்! வந்து காணீர்! |