Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 23 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
23ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 1
சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1
சீதம்,Seetham - குளிர்ந்திரா நின்றுள்ள
கடல்,Kadal - திருப்பாற்கடலிலே
உன் அமுது அன்ன,Un amuthu anna - உள்ளமுதாகப் பிறந்த பிராட்டியோடொத்த
தேவகி,Devaki - தேவகிப் பிராட்டியால்
கோதை குழலான் அசோதைக்கு போத்தந்த,Kothai kuzhalan asothai ku pothantha - பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட கேச பாசத்தை யுடைய யசோதைப் பிராட்டிக்குப் போகவிடப்பட்டவனாய்
பேதை,Pethai - அறிவின்மையை யுடையனாய்
குழவி,Kuzhavi - சிசுவான கண்ணபிரான்
பிடித்து,Pidithu - (தன் கைகளால்) பிடித்து
சுவைத்து,Suvaithu - ருசி பார்த்து
உண்ணும்,Unnum - திருப்பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள
பாதம் கமலங்கள்,Paatham kamalangal - திருவடித் தாமரைகளை.
காணீர்,Kanneer - வந்து காணுங்கோள்.
பவளம்,Pavalam - பவளம் போல் சிவந்த
வாயீர்,Vaayir - அதரத்தையுடைய பெண் காள்! வந்து காணீர்!