| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 230 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 8 | வாளா வாகிலும் காண கில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து தோளா லிட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப் படாதன செய்தாய் கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன் காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே-3-1-8 | வாளா ஆகிலும்,Vaalaakilum - (நீ தீம்பு செய்யாமல்) வெறுமனே யிருந்தாலும் காண கில்லார்,Kaana Killar - (உன் மினுக்குப் பொறாதவர்கள்) (உன்னைக்) காண வேண்டார்கள்; நீ,Nee - (இப்படியிருக்கச் செய்தேயும்) நீயோ வென்றால் பிறர் மக்களை,Pirar Makkalai - அயற் பெண்டுகளை மையன்மை செய்து,Maiyanmai Seidhu - (உன்னுடைய இங்கிதாதிகளாலே) மயக்கி தோளால் இட்டு,Tholaal Ittu - (அவ்வளவோடு நில்லாமல்) (அவர்களைத்) தோளாலும் அணைத்திட்டு அவரோடு,Avarodu - அப் பெண்களோடு திளைத்து,Thilaiththu - விளையாடி சொல்லப்படாதன,Sollappadadhana - வாயாற் சொல்லக் கூடாத காரியங்களை செய்தாய்,Seidhai - (அவர்கள் விஷயத்திலே) செய்தாய்; ஆயர் குலத்தவர்,Aayar Kulathavar - இடைக் குலத்துத் தலைவர்கள் இப் பழி,Ip Pali - இப்படிப் பட்ட பழிகளை கேளார்,Kaelaar - கேட்கப் பொறார்கள்; கெட்டேன்,Kettaen - (இப் பழிகளைக் கேட்கப் பெற்ற நான்) பெரும் பாவியாயிரா நின்றேன்; வாழ்வு இல்லை,Vazhvu Illai - (இனி எனக்கு இவ் வூரில்) வாழ்ந்திருக்க முடியாது, நந்தற்கு,Nandharku - நந்த கோபருக்கு ஆளா,Aalaa - (அழகியதாக) ஆள் பட்ட பிள்ளாய்; உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன் |