Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2300 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2300மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அஞ்சாது இருக்க அருள் என்றார் அநந்தரம்-திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால் அவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ – அன்றிக்கே – அவன் தான் செய்ய வல்லானோ -என்று நெஞ்சு பிற்காலிக்க-அவை ஒன்றும் இல்லை காண்- யோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன் அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும் நீ பயப்பட வேண்டா என்கிறார் – அருள் என்னும் காட்டில் அருளுமோ என்று திரு உள்ளம் விசாரிக்க -நமக்கு அருளாது ஒழியுமோ -என்கிறார் – அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷித்தல் அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே -நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் – 19
அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,
முந்தையராய் நிற்பார்க்கு முன்.
இருளாத சிந்தையர் ஆய், Irulaadha Sindhaiyar Aayi - அஜ்ஞானவிருள் சேராத நெஞ்சையுடையாய்க் கொண்டு
சே அடிக்கே, Sae Adikke - திருவடிகளுக்கு
செம் மலர் தூய், Sem Malar Thoo - நல்ல புஷ்பங்களை ஸமர்ப்பித்து
கை தொழுது, Kai Thozhudhu - அஞ்ஜலிபண்ணி
முந்தையர் ஆய் நிற்பார்க்கு, Mundhaiyar Aayi Nirpaarkku - ‘நான் முன்னே நான் முன்னே‘ என்று நிற்கும் பக்தர்களுக்கு,
முன் அன்று, Mun Andru - முன்பொருகாலத்தில்
தெருளாத பிள்ளை ஆய், Therulaadha Pillai Aayi - அறியாத சிறு குழந்தையாய்
ஆல் இலைமேல் சேர்ந்தான், Aal Ilaimeel Serndhaan - ஆலந்தளிரில் சயனித்த பெருமான்
அருளாது ஒழியுமே, Arulaadhu Ozhiyume - கிருபைபண்ணாமற்போவனோ?