| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2301 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் தன்னை அபேஷித்தார்க்குத் தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது என்கிறார் – சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே – உன் படியை நீயே சொல்ல வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானைக் கேட்கிறார் – அவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் என்கிறார் – 20 | முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே? – என்னே திருமாலே செங்க ணெடியானே, எங்கள் பெருமானே நீயிதனைப் பேசு. | முன், Mun - முன்பொரு காலத்தில் உலகம், Ulagam - உலகங்களை யெல்லாம் உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்திருந்து உமிழ்ந்தாய்க்கு, Umizhndhaaykku - பிறகு வெளிப்படுத்தின உனக்கு அவ்வுலகம், Avvulagam - அந்த வுலகங்களை பின், Pin - பின்பொருகாலத்தில் ஈர் அடியால், Eer Adiyaal - இரண்டு திருவடிகளாலே அளந்து கோடல், Alandhu Koadal - அளந்து கொள்வதானது பெரிது ஒன்றே, Peridhu Ondre - பெரியவொரு காரியமாகுமோ? திருமாலே, Thirumaale - திருமகள்நாதனே! செம் கண் நெடியானே, Sem Kan Nediyanae - சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வாதிகளே! எங்கள் பெருமானே, Engal Perumane - எமக்கு ஸ்வாமியானவனே! நீ இதனை பேசு, Nee Idhanai Pesu - நீ இதை (எனக்குத் தெரிய)ச் சொல்லவேணும், என்னே, Ennae - இஃது என்னோ? |