| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2302 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் – கீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம் ப்ரஸ்திதமான வாறே அப்படி வரையாதே பரிமாறும் ஸ்ரீ கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் – கீழ் திரு உலகு அளந்து அருளின இடம் ப்ரஸ்த்துதம் ஆகையால் அப்படி வரையாதே பரிமாறும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிறார் – அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் – 21 | பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே வாச மலர்த்துழாய் மாலையான், – தேசுடைய சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ வக்கரனைக் கொன்றான் வடிவு. | வாசம் மலர் துழாய் மாலையான், Vaasam Malar Thuzhai Maalaiyaan - மணம்மிக்க புஷ்பங்களோடு கூடின திருத்துழாய் மாலையை அணிந்தவனும் தேச உடைய சக்கரத்தான், Desa Udaiya Chakkaraththaan - தேஜ்ஸ்ஸையுடைய திருவாழியை ஏந்தினவனும் சங்கினான், Sanginaan - ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும் சார்ங்கத்தான், Saarngakthaan - சார்ங்கவில்லையுடையவனும் பொங்கு அரவம் வக்கரனை கொன்றான், Pongu Aravam Vakkaranai Konraan - மிக்க ஆரவாரமுடையனாய் வந்த தந்தவக்த்ரனைக் கொண்றொழித்தவனுமான எம்பெருமாளுடைய வடிவு, Vadivu - ஸ்வரூப ஸ்வபாவங்கள் (எப்படிப்பட்டவை யென்னில்) பேசுவர், Pesuvar - பேசுகின்றார்களோ அவ்வளவே, Avvalave - அவ்வளவேயாம். |