| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2303 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றாரே – அநந்தரம் திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் என்கிறார் – அவன் படி பரிச்சேதிக்கப் போகாத பின்பு அவன் தானே காட்டக் காண் என்கிறார் – ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் – 22 | வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும் கடியார் மலர்தூவிக் காணும் – படியானை, செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே, மெய்ம்மையே காண விரும்பு. | நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே! வானவர்கள், Vaanavargal - நித்யஸூரிகள் வடிவு ஆர், Vadivu Aar - அழகு பொருந்திய முடி, Mudi - கிரீடங்களை கோட்டி, Kotti - தாழ்த்தி கடி ஆர் மலர், Kadi Aar Malar - மணம் பொருந்திய புஷ்பங்களை நாளும், Naalum - நாள்தோறும் காணும் படியானை, Kaanum Padiyanaai - ஸேவிக்கப்பெற்ற திருமேனியையுடையனான எம்பெருமானை செம்மையால், Semmaiyaal - முறைப்படியே உள் உருகி, Ul Urugi - உருக்கங்கொண்டு செவ்வனே, Sevvane - ருஜுவான வழியாலே மெய்ம்மெயே, Meimmaiye - உள்ளபடியே காண, Kaana - ஸேவிப்பதற்கு விரும்பு, Virumbu - ஆசைப்படு |