Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2304 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2304மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – மெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே –அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது – தான் சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி – இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ உபதேசம் பலித்த படி சொல்கிறது – காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன் திருவடிகளிலே பிச்சேறி விழுகிற படி யைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் – 23
விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,
மனம்துழாய் மாலாய் வரும்.
வண்தார், Vanthaar - அழகிய மாலையிலே
அம் சிறைய சுரும்பு, Am Siraiya Surumbu - அழகிய சிறகுகளையுடைய வண்டுகள்
துளையில் சென்று ஊத, Thulaiyil Senru Oodha - ரஸநாடியிலே படிந்துஊத (அதனால்)
அரும்பும், Arumbum - அரும்புகள் உண்டாகப்பெற்ற
புனம் துழாய் மாலையான், Punam Thuzhaai Maalaiyaan - நல்ல திருத்துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய
விரும்பி விண்மண் அளந்த பொன் அம்கழற்கே, Virumbi Vinman Alandha Pon Amkazharkke - ஆசைப்பட்டு விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள் விஷயத்திலேயே
மனம், Manam - எனது மனமானது
துழாய், Thuzhaai - அவகாஹித்து
மால் ஆய் வரும், Maal Aay Varum - மயங்கிக் கிடக்கின்றது.