| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2305 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று ஏறி மறிந்து இராதே -நெஞ்சே அவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் – ஆசை பிறந்த பின்பு இனி விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார் என்கிறார் – ஆசை பிறந்த பின்பு விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார்- அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே- நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் – 24 | வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும், நெருங்குதீ நீருருவு மானான், – பொருந்தும் சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும் தொடராழி நெஞ்சே தொழுது. | ஆழி நெஞ்சே, Aazhi Nenjae - கம்பீரமான மனமே! இரு நிலனும், Iru Nilanum - விசாலமான பூமியும் மால் விசும்பும், Maal Visumbum - அளவிறந்த ஆகாசமும் காற்றும், Kaatrum - வாயுவும் நெருங்கு தீ, Nerungu Thee - செறிந்த தேஜஸ்ஸும் நீர் உருவும் ஆனான், Niir Uruvum Aanan - ஜலதத்துவமும் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும் பொருந்தும் சுடர் ஆழி ஒன்று உடையான், Porundum Sudar Aazhi Ondru Udaiyaan - பொருந்திய ஒரு சுடர்ச்சக்கரத்தை யுடையவனுமான எம்பெருமானுடைய சூழ் கழலே, Soozh Kazhale - அடியாரை அகப்படுத்திக்கொள்ளுகிற திருவடிகளையே வருங்கால் நாளும், Varungaal Naalum - மேலுள்ள காலமெல்லாம் தொழுது, Thozhudhu - வணங்கி தொடர், Thodar - (அவனையே) பின்பற்றியிரு. |