| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2306 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் திரு உள்ளமானது திமிர்த்துத் தன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து இருந்தாப் போலே இருந்தது – அத்தைப் பார்த்து நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால் உனக்கு வருவதொரு குறை இல்லை காண் என்கிறார் – நான் சொல்லுகிறது தப்புண்டோ என்கிறார் – அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் – 25 | தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம், முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, – விழுதுண்ட வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து. | தூ நீர் உலகம், Thoo Neer Ulagam - நிர்மலமான நீரையுடைய கடலோடு கூடின உலகங்களை முழுது, Muzhuthu - முழுவதும் உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்தவனாயும் மொய் குழலாள் ஆய்ச்சி, Moyi Kuzhalal Aaychchi - அழகிய கூந்தலையுடையளான யசோதையினுடைய விழுது, Vizhudhu - வெண்ணெயை உண்ட வாயானை, Unda Vaayaanai - அமுதுசெய்த வாயையுடையவனாயும் மால் விடை ஏழ் செற்றானை, Maal Vidai Ezh Setraanai - கொழுத்த ரிஷபங்களேழையும் முடித்தவனாயும் வானவர்க்கும் சேயானை, Vaanavarkkum Seyaanai - பிரமன் முதலிய தேவர்களுக்கும் எட்டாதவனாயுமுள்ள எம்பெருமானே நெஞ்சே, Nenchae - நெஞ்சமே! சிறந்து, Siranthu - சிறப்புற தொழுதால், Thozhudhaal - வணங்கினால் பழுது உண்டே, Pazhudhu Undae - குற்ற மேதேனுமுண்டோ? |