| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2309 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் – கீழ்-ஸ்ரீ வேங்கடமும் ஸ்ரீ வெக்காவும் ஸ்ரீ வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் – இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் – 28 | அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று மிடைந்தது பாரத வெம்போர், – உடைந்ததுவும் ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப் பேய்ச்சிபா லுண்ட பிரான். | வான் எயிறு, Vaan Eiyiru - வான்போன்ற பற்களையுடையளான பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய பால், Paal - முலைப்பாலை உண்ட, Unda - உண்டு அவளை முடித்தவனான பிரான், Piraan - ஸ்வாமியானவன் அடைந்தது, Adaindhathu - பள்ளிக்கொண்டது அரவு அணை மேல், Aravu Anai Mel - சேஷசயனத்தின் மேலாம் அன்று, Andru - முன்னொரு காலத்தில் ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக மிடைந்தது, Midaindhathu - நெருங்க நடத்தினது வெம் பாரதம் போர், Vem Bharatham Por - கடுமையான பாரதயுத்தமாம், உடைந்ததுவும், Udaindhathuvum - அஞ்சி நின்றதும் ஆய்ச்சிபால், Aaychipaal - இடைச்சியான யசோதைப் பிராட்டியினிடத்துண்டான மத்துக்கே, Maththukke - மத்துக்காகவாம், அம்மனே, Ammane - அந்தோ! |