Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2310 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2310மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே அவளுடைய ச்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி அவளும் ஒருத்தியே -என்று கொண்டாடுகிறார் – கீழே உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே அச்சத்துக்கு இவன் பால் ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கும் ஸ்ரீ யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை – என்கிறது – கீழே-மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே இதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது – அச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை–ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இறே அச்சம் – அச்சத்துக்கு இவனுக்கு ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கு ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு ஒப்பு இல்லை -என்கிறார் – ப்ரஸ்துதையான ஸ்ரீ யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் – 29
பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த
இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,
தெருளா மொழியானைச் சேர்ந்து.
பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய
பால், Paal - முலைப்பாலை
உண்ட, Unda - அமுதுசெய்த
பெருமானை, Perumaanai - ஸ்வாமியானவனும்
வாய்ந்த இருள் ஆர் திருமேனி, Vaindha Irul Aar Thirumeni - அமைந்த இருள்போன்ற திருமேனியை யுடையவனும்
இனம் பவளம் செம்வாய், Inam Pavalam Semvaai - அழகிய பழம் போற்சிவந்த அதரத்தை யுடையவனும்
தெருளா மொழியானை, Therula Mozhiyanaai - உருத்தெரியாத மழைலைச் சொற்களைச் சொல்லும் சிறு குழந்தையுமான கண்ணபிரானை
சேர்ந்து, Serndhu - கிட்டி
ஆய்ச்சி, Aaychi - யசோதையானவன்
பேர்ந்து எடுத்து, Perndhu Eduthu - வாரியெடுத்தணைத்து கொண்டு
அஞ்சாதே, Anjaadhe - சிறிதும் பயப்படாமல்
முலை கொடுத்தான், Mulai Koduththaan - தன் முலையை உண்ணக் கொடுத்தான்.