Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2311 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2311மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் ஸ்நேஹித்தாள் – இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில் அவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் – ஒரு கால விசேஷத்திலே ஒருத்திக்கு எளியனான இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி ஸ்ரீ கோயில்கள் எங்கும் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் – அவன் சந்நிஹிதன் ஆகையால் ஸ்நேஹித்தாள்-இப்போது நமக்கு சந்நிஹிதன் அன்றே என்னில் அவன் சந்நிஹிதனான இடங்கள் சொல்லுகிறார் – அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி ஸ்ரீ கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் – 30
சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, – வாய்ந்த
மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,
இறைபாடி யாய இவை.
கடல், Kadal - திருப்பாற் கடலென்ன
குடந்தை, Kudandhai - திருக்குடந்தை யென்ன
வேங்கடம், Vengadam - திருமலையென்ன
நேர்ந்த என் சிந்தை, Nerndha En Sindhai - நேர்பட்ட எனது ஹ்ருதயமென்ன
நிறை விசும்பும், Nirai Visumbum - பரம்பின பரமபதமென்ன
வாய்ந்த மறை, Vaindha Marai - அமைந்த வேதமென்ன
பாடகம், Paadagam - திருப்பாடகமென்ன
அனந்தன், Ananthan - ஆதிசேஸனென்ன
ஆய இவை, Aaya Ivai - ஆசிய இவையெல்லாம்
வண் துழாய் கண்ணி, Van Thuzhai Kanni - அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள
திருமால் சேர்ந்த, Thirumaal Serndha - எம்பெருமான் நித்யவாஸம் பண்ணப்பெற்ற
இறபாடி, Irabaadi - ராஜதானிகளாம்.